புது தில்லியிருந்து: விவசாயிகளின் தற்கொலைச் சம்பவங்கள் இந்தியாவிலேயே தென் மாநிலங்களில்தான் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனால், இத்தகைய சம்பவங்கள் எதுவும் நடைபெறாத மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெறுகிறது. 2009-ம் ஆண்டிலிருந்து 2011 வரை, இந்தியாவில் 3160 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்களில், ஆந்திரம், கர்நாடகம், கேரள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் 1800 பேர். ஆந்திர மாநிலத்தில் மட்டும் 920 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மத்திய வேளாண் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் சரத் பவாரின் சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்தில் 1539 தற்கொலைகள் நடந்துள்ளன ஆனால், தமிழகத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் கூட நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலை மத்திய வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நன்றி:தினமணி
நன்றி:தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக