பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் அறிவிப்பினை இங்கே இலவசகமாகவே வெளியிடலாம். உங்கள் குழந்தைகளின் புகைப்படம் மட்டும் பிறந்த நாள் விவரத்தினை தெளிவாக எமக்கு மின்னஞ்சல் செய்யவும். மின்னஞ்சல் முகவரி: ponseinilam@gmail.com
வணக்கம் !நீங்களும் நமது இணையத்தில் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் ! உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம்.-பொன்செய் நிலம்

20111229

மாசானபு புகோகாவின் சிந்தனைத் துளிகள்

1. உழுத நிலம் கேட்பதில்லை வனத்தில் முளைக்கும் விதைகள்

2.மழை மண்ணிலிருந்தோ விண்ணிலிருந்தோ உண்டாவதில்லை. அது மரங்களிலிருந்து உண்டாகிறது.

3. இயற்கை வேளாண்மை உலகின் எப்பகுதிக்கும் பொருந்தும்.

4. இயற்கை ஒருபோதும் மாறுவதில்லை.அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது. காலம் எவ்வளவுதான் மாறினாலும் வேளாண்மையின் பாதுகாவலனாக இயற்கை வேளாண்மை விளங்கும்


5. சுற்றுச்சூழல் கெடுவதால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இயற்கையின் ஒரு பகுதியான மனிதனின் மனமும் மாசு படுகிறது. அதனால், மன இறுக்கம் மற்றும் தீமை பயக்கும் எண்ணங்கள் தோன்றுகின்றன.


6. நிலம் , நீர் , மரம் , பூச்சி -- இவைகளை அப்படியே விட்டுவிட்டு விளைச்சல் பெரும் வேளாண்மைதான் இயற்கை வேளாண்மை


7. உற்பத்திக்கு பயன்படுத்திய சக்தியை மட்டும் கணக்கிட்டுப் பார்த்தாலே இயற்கை வேளாண்மை மட்டுமே சிறந்த வேளாண்மை என்பது புரியும்


8. எந்த இயற்கைக்குத் திரும்ப மனிதன் ஆசையோடு முயற்சிக்கிறானோ, அந்த இயற்கையின் அடிப்படையே ,மாறி நிரந்தரமாக வேறுபட்டு விட்டால், எப்படி அதை அடைவது?


9. உண்மையான சந்தோஷமான வாழ்க்கையை ஒருவன் இயற்கையோடு இணைந்துதான் அனுபவிக்கமுடியும்.

பிஎம்டபிள்யூ கார்களின் டயர்கள்- சிறப்பு பார்வை

Run Flat Tyre
சென்னை: எத்தனை கார் மாடல்கள் வந்தாலும், பிஎம்டபிள்யூவின் கார்களுக்கு சந்தையில் தனி மவுசு உண்டு. அதற்கு முக்கிய காரணம் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளில் பிஎம்டபிள்யூ கார்களை தட்டிக்கொள்ள வேறு கார்களில்லை என்று கூறலாம்.

அந்த அளவுக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளை அளிப்பதில் பிஎம்டபிள்யூ எப்போதும் மார்க்கெட் நம்பர் ஒன் லீடராக இருந்து வருகிறது. இதில், பல குறிப்பிட்ட வசதிகள் மாடலுக்கு தகுந்தாற்போல் மாறுபடும். ஆனால், அதில் ஒன்றே ஒன்று மட்டும் விதிவிலக்கு.

ஆம். டயர்கள்தான் அவை. பிஎம்டபிள்யூவின் அனைத்து சொகுசு கார்களிலும் ரன் ப்ளாட் டயர்கள் இல்லாமல் கார் தொழிற்சாலையை விட்டு வெளியில் வராது. கார்களின் பாதுகாப்பில் டயர்கள் முக்கிய பங்கு வகிப்பதால், டயர் விஷயத்தில் பிஎம்டபிள்யூ எப்போதும் கரராக இருந்து வருகிறது.

அமெரிக்காவாக இருந்தாலும், ஆப்ரிக்காவாக இருந்தாலும் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் ரன்ப்ளாட் டயர்களை பொருத்திதான் தனது கார்களை பிஎம்டபிள்யூ விற்பனை செய்து வருகிறது.

ஏனெனில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு விஷயத்தில் எந்தவொரு மாற்றுக்கருத்தையும் அந்த நிறுவனம்கொண்டிருக்கவில்லை.

அப்படி என்னதான் இருக்கு ரன்ப்ளாட் டயர்ல:

அதிநவின தொழில்நுட்பம் மற்றும் 100% பாதுகாப்பு வசதியை கொண்டதுதான் ரன்ப்ளாட் டயர்கள். பொதுவாக விவிஐபி கார்களில் இந்த டயர்கள்தான் பொருத்தப்படுகின்றன.

டயர்களில் திடீரென காற்றின் அழுத்தம் குறைந்தாலும், பஞ்சரானாலும் ரன்ப்ளாட் கார்களில் கண்ணை மூடிக்கொண்டு பயணத்தை தொடரலாம். இதில், ட்யூபை சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ள 'சைடுவால்' எனப்படும் கடினமான டயர்பகுதி காரின் எடையை தாங்கிக்கொள்ளும்.

இதேபோன்று, விஷேச ரிம்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், டயரில் காற்று குறைந்தால்கூட காரின் பேலன்ஸ் குறையாமல் சீராக செல்லும் என்பதால் விபத்து ஏற்படாது. டேஷ்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் இன்டிகேட்டர் டயர்களில் காற்று குறைந்தால் அதுகுறித்து டிரைவரை எச்சரிக்கும்.

இருப்பினும், உடனடியாக டயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. டயர்களில் காற்று இல்லாவிட்டால் கூட காரை அதிகப்பட்சம் 80 கி.மீ. வேகத்தில் குறிப்பிட்ட தூரம் வரை ஓட்டி செல்ல முடியும்.

இந்த டயர் பொருத்தப்பட்டிருக்கும் கார்களில் ஸடெப்னி டயர் தேவையில்லை என்பதால், 20 கிலோ வரை காரின் எடை குறையும் என்பதால் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.

502 கிமீ வேகத்தில் பைக்கில் பறந்து அமெரிக்க ரேஸர் சாதனை

Driving Record
புளோரிடா: கன்வென்ஷனல் என்று கூறப்படும் சாதாரண ரக பைக்கை மணிக்கு 502 கிமீ வேகத்தில் ஓட்டி அமெரிக்காவை சேர்ந்த பைக் ரேஸர் ஒருவர் சாதனை புரிந்துள்ளார்.

புளோரிடாவை சேர்ந்த பைக் ரேஸர் பில் வார்னர். இவர் சுஸுகி நிறுவனத்தின் ஹயபுசா பைக்கை 502 கிமீ வேகத்தில் ஓட்டி சாதனை புரிந்துள்ளார்.

அமெரிக்காவில் மெயினி என்ற இடத்தில் உள்ள விமானப்படை தளத்தில், அவர் இந்த சாதனையை புரிந்தார்.

அதிவேகமாக ஓட்டுவதற்கான பைக்குகள் ஆற்றல்வாய்ந்த எஞ்சின் மற்றும் பிரத்யேக வடிவமைப்பை கொண்டிருக்கும். ஆனால், சாதாரண ரகத்தை சேர்ந்த சுஸுகி ஹயபுசா பைக்கை இவ்வளவு வேகத்தில் ஓட்டியதே அவரது பெருமைக்கு முக்கிய காரணம்.

இதற்கு முன்பும் பில் வார்னர் ஹையபுசா பைக்கில் அதிவேகமாக ஓட்டி சாதனை புரிந்துள்ளார். அப்போது இவர் 448.36 கிமீ வேகத்தில் ஓட்டி சாதனை படைத்திருந்தார். அவரது முந்தைய சாதனையை தற்போது அவரே முறியடித்துள்ளார்.

இதுகுறித்து பில் வார்னர் கூறுகையில்,"பைக்கை 502கிமீ வேகத்திற்கு கொண்டு சென்றது எனக்கு பெரிய விஷயமாகவே இல்லை. ஆனால், ரன்வேயின் குறிப்பிட்ட தூரத்திற்குள் பைக்கின் வேகத்தை கட்டுப்படுத்தி நிறுத்துவதுதான் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது," என்றார்.

இந்தோனேஷியாவில் புதிய அப்பாச்சியை பார்வைக்கு வைத்த டிவிஎஸ்

Tvs Apache
மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கூடிய அப்பாச்சி ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தோனேஷியாவில் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது டிவிஎஸ்.

டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றான அப்பாச்சி இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஸ்போர்ட்ஸ் பைக்காக திகழ்கிறது.

இருந்தாலும், அதிக விலை கொண்ட உதிரிபாகங்கள், மட் கார்டு சவுண்டு மற்றும் வசதியாக இல்லாத இருக்கைகள் ஆகியவை அப்பாச்சிக்கு மைனஸ் பாயிண்டுகளாக இருக்கின்றன.

யமஹா ஆர்15 மற்றும் 150சிசி பல்சருக்கு பெரும் போட்டியாக அப்பாச்சி இருந்தாலும், மேற்கண்ட காரணங்களால் குறிப்பிட்ட விற்பனை வளர்ச்சியை எட்ட முடியவில்லை.

இந்த நிலையில், மேற்கண்ட குறைகளை களைந்து சந்தை போட்டியை சமாளிக்கவும், விற்பனையை அதிகரிக்கவும் அப்பாச்சியை புத்தம் புதிய வடிவில் டிவிஎஸ் அறிமுகப்படுத்த உள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதனிடையே எதிர்பார்ப்பை விஞ்சும் வகையிலான கம்பீரமான வடிவமைப்பு கொண்ட புதிய அப்பாச்சியை டிவிஎஸ் நிறுவனம் இந்தோனேஷியாவில் பார்வைக்கு கொண்டு வந்தது.

புதிய அப்பாச்சியின் டேங்க் தற்போதுள்ள அப்பாச்சி போன்று இருந்தாலும், ஒரு முழுமையான ஸ்போர்ட்ஸ் பைக் தோற்றத்தை கொடுக்கும் வகையில் பைக் முழுவதும் கவர் செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அகலமான டயர்கள், சீறும் தோற்றத்துடன் முகப்பு பகுதி, ஸ்டெப்டு இருக்கைகள் ஆகியவை அப்பாச்சியை ஒரு முழுமையான ஸ்போர்ட்ஸ் பைக்காக மாற்றியுள்ளது. மேலும், அதிக அகலம் கொண்ட டயர்களும் கம்பீரத்தை கூட்டுகிறது.

இந்த பைக்கின் எஞ்சின் குறித்த விபரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் இல்லை. இருப்பினும், 220 சிசி எஞ்சினுடன் வரலாம் என்று மார்க்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், வரும் ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள ஆட்டோ கண்காட்சியில் புதிய அப்பாச்சியை டிவிஎஸ் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து டூ வீலர்களுக்கும் ஒரே எஞ்சினை உருவாக்கி டிவிஎஸ் சாதனை

Tvs Wego
ஸ்கூட்டர் அல்லது மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட எந்தவொரு டூ வீலர்களிலும் பொருத்தும் வகையிலான ஒரே எஞ்சினை டிவிஎஸ் மோட்டார்ஸ் உருவாக்கி சாதனை படைத்துள்ளது. அந்த நிறுவன எஞ்சினியர்களின் 7 ஆண்டுகால முயற்சியில் இந்த புதிய எஞ்சின் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய எஞ்சின் சாதாரண எஞ்சின்களை விட 20 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார்ஸ் புதிய தொழில்நுட்ப உருவாக்க பிரிவு தலைவர் ஹார்னி வினய் சந்திரகாந்த் கூறியதாவது:

"ஸ்கூட்டர் அல்லது பைக்குகளில் பொருத்துவதற்கு ஏதுவாக ஒரே எஞ்சினை உருவாக்கியுள்ளோம். இந்த எஞ்சின் உற்பத்தி நிலையை எட்டவுள்ளது. தற்போது 110 சிசி திறன் கொண்ட எஞ்சினை உருவாக்கியுள்ளோம். 250 சிசி வரை ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட எஞ்சின்களை இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் உருவாக்க முடியும்.

பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் எங்களது வடிவமைப்பு பிரிவு எஞ்சினியர்களின் 7 ஆண்டுகால முயற்சியில் புதிய எஞ்சின் உருவாக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு புதிய எஞ்சின் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் என்பதோடு, குறைந்த கார்பன் புகையை வெளியிடும் என்பதால் சுற்றுச்சூழலுக்கும் உகந்த எஞ்சினாக இருக்கும்.

தவிர, இந்த புதிய எஞ்சின் மூலம் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கு தனித்தனியாக உற்பத்திப் பிரிவு தேவைப்படாது என்பதால் உற்பத்தி செலவு வெகுவாக குறையும்.

வரும் 2013ம் ஆண்டில் புதிய எஞ்சினுடன் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். முதலில் ஸ்கூட்டரில் இந்த புதிய எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும். வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய வசதியாக ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல்களை விற்பனை செய்வோம்," என்றார்.

பைக் திருட்டை தடுக்கும் டிஜிட்டல் லாக்கிங் சிஸ்டம்: தமிழக வாலிபர் கண்டுபிடிப்பு

Digital Locking system for Bikes
கள்ளச்சாவி போட்டு மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதை தடுக்கும் அதிநவீன சாதனத்தை திருக்கோவிலூரை சேர்ந்த எஞ்சினியரிங் பட்டதாரி வடிவமைத்துள்ளார். இந்த சாதனம் விரைவில் வர்த்தக ரீதியில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை சேர்ந்தவர் கார்த்திக்(23). இவர் சென்னையிலுள்ள தனலட்சுமி எஞ்சினியரிங் கல்லூரியில் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பட்டப் படிப்பை முடித்துள்ளார்.

இந்த நிலையில், இவர் பைக்குகள் திருட்டுப் போவதை தடுக்கும் நவீன தொழில்நுட்பம் கொண்ட மின்னணு சாதனத்தை வடிவமைத்துள்ளார். டிஜிட்டல் பைக் லாக்கிங் சிஸ்டம் என்று பெயரிட்டுள்ள இந்த சாதனத்தை பைக்குகளில் பொருத்திவிட்டால், கள்ளச்சாவி போட்டோ அல்லது ஒயரை இணைத்தோ பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியாது.

மேலும், வண்டியின் உரிமையாளர் ஒரிஜினல் சாவியை போட்டாலும், ஸ்பீடோ மீட்டர் கன்சோலில் பொருத்தப்படும் பட்டன்களில் ரகசிய குறியீட்டு எண்களை (பாஸ் வேர்டு) பதிவு செய்தால் மட்டுமே பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியும்.

மேலும், இந்த கருவி ஸ்பார்க் ப்ளக்கையும் கட்டுப்படுத்துவதால் எந்த வகையிலும் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியாது என்று அடித்து கூறுகிறார் கார்த்திக். மேலும், தவறான பாஸ்வேர்டை பதிவு செய்து வண்டியை எடுக்க முயன்றால் அலாரம் அடித்து உரிமையாளரை இந்த சாதனம் உஷார்படுத்திவிடும்.

தனது கண்டுபிடிப்புக்கு கார்த்திக் காப்புரிமையையும் பெற்றுள்ளார். மேலும், வாகன நிறுவனங்களுக்கு தனது கண்டுபிடிப்பு குறித்து தெரியப்படுத்தியுள்ளார். வர்த்தக ரீதியில் தனது கண்டுபிடிப்பை தயாரித்து வழங்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கார்த்திக் கூறுகையில்,"சிறு வயது முதலே ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் இருந்தது. இந்த ஆர்வமே டிஜிட்டல் பைக் லாக்கிங் சிஸ்டம் கண்டுபிடித்தற்கு முக்கிய காரணம்.

எனது கண்டுபிடிப்பு குறித்த விபரங்களை பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளேன். வர்த்தக ரீதியில் இந்த சாதனத்தை விற்பனை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்.

பைக் திருட்டை தடுப்பதற்கு டிஜிட்டல் பைக் லாக்கிங் சிஸ்டம் நிச்சயம் பேரூதவி புரியும். மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பிற சாதனங்களை காட்டிலும் இது முற்றிலும் வேறுபட்டதாகவும், 100 சதவீதம் பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

இருசக்கர வாகனங்களில் இந்த சாதனத்தை பொருத்துவதற்கு ரூ.700ம், கார்களுக்கு பொருத்த ரூ.2,000மும் செலவாகும்.

மேலும், கார்களில் பொருத்தப்படும் சாதனத்தில் கார் திருடப்பட்டால் அதுகுறித்து உரிமையாளருக்கு மொபைல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் உள்ளது," என்று கூறினார்.

தனது கண்டுபிடிப்பை வர்த்தக ரீதியில் விற்பனை செய்ய இருப்பதாக கார்த்திக் நம்மிடம் தெரிவித்தார். இந்த சாதனத்தை பெறுவது குறித்த விபரங்களுக்கு 09894282845 என்ற மொபைல் எண்ணிலும், kartikplayer@gmail.com என்ற இமெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய சந்தையை 'ஆக்கிரமிக்க' வரும் எலக்ட்ரிக் கார்கள்!

Mahindra Reva
சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, பாக்கெட்டிலுள்ள பணத்திற்கும் பங்கம் விளைவிக்காத பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பதில் உலகின் முதன்மையான நாடாக இந்தியா மாறி வருகிறது.

எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளன.

முன்னணி நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக இந்திய சந்தையை ஆக்கிரமிக்க உள்ளன. சந்தையில் பரப்பை ஏற்படுத்தியுள்ள முன்னணி நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார்கள் பற்றிய தொகுப்பு இது:

ரேவாNXR: எலக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் முதலில் அறிமுகப்படுத்தி சூடுபட்டுக்கொண்டது மஹிந்திரா நிறுவனம். டெல்லி மற்றும் பெங்களுரில் அறிமுகப்படுத்தப்பட்ட ரேவா எதிர்பார்த்த அளவு விற்பனையாகவில்லை.

இதையடுத்து, 4பேர் அமர்ந்து செல்லக்கூடிய ரேவா NXR மற்றும் 2 பேர் அமர்ந்து செல்லக்கூடிய ரேவா NXG எலக்ட்ரிக் கார்களை இப்போது மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளது மஹிந்திரா. மணிக்கு அதிகப்பட்சம் 105 வேகத்தில் செல்லும திறன் கொண்ட ரேவா NXR காரில், லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கி.மீ., பயணம் செய்யலாம்.

டொயோட்டோ பிரையஸ்: இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட ஹைபிரிட் எலக்ட்ரிக் கார் பிரையஸ். ஏரோடைனமிக் வடிவமைப்பு கொண்ட பிரையசில் 100ps திறனை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், எலக்ட்ரிக் மோட்டாரும் சேர்ந்து காரை இயக்கும். இதில் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரிக் வாட்டர் பம்ப் எரிபொருள் சிக்கனத்தைத் தர வல்லது.

செவர்லெ வோல்ட்: ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள எலக்ட்ரிக் கார் செவர்லெ வோல்ட். ஒரு முறை சார்ஜ் செய்தால் 64 கி.மீ.,வரை செல்லும் வோல்ட், வழியில் சார்ஜ் தீர்ந்துவிட்டாலும் பயணம் தடைபடாது. அதற்கேற்ப இதில் எரிவாயுவில் இயங்கும் ஜெனரேட்டரை இயக்கி தொடர்ந்து பயணிக்க முடியும். இதுதவிர, ஸ்பார்க், பீட் உள்ளிட்ட மாடல்களின் எலக்ட்ரிக் மாடல் கார்களையும் ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

ஹூண்டாய் எலக்ட்ரிக் ஐ10: ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள தனது பிரபல ஐ10 மாடலின் எலக்ட்ரிக் மாடல் கார் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 16kWh திறன் கொண்ட பேட்டரியும் 49kWh திறன் கொண்ட எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. இது மணிக்கு அதிகப்பட்சம் 130கி.மீ.,வேகத்தில் செல்லும் திறன் படைத்து. ஒரு முறை சார்ஜ் செய்தால் 160கி.மீ.,செல்லலாம்.

எலக்ட்ரானிக் சாதனங்களை இயக்கும் வகையில் புதிய கார் சாதனம்:மிட்சுபிஷி அறிவிப்பு

Mistubishi EV Car
டோக்கியோ: எலக்ட்ரிக் கார் பேட்டரி மூலம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் வாஷிங் மெஷின், எலக்ட்ரிக் குக்கர் ஆகியவற்றை இயக்கும் வகையில் புதிய சாதனத்தை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக மிட்சுபிஷி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த புதிய சாதனத்தை ஜப்பானிலுள்ள தனது கார் வடிவமைப்பு மற்றும் ஆய்வுக்கூடத்தில் மிட்சுபிஷி உருவாக்கி வருகிறது. இன்னும் ஓர் ஆண்டில் புதிய சாதனத்தை சந்தைப்படுத்த இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறிய அளவிலான அந்த சாதனத்தை தனது ஐ-எம்ஐஇவி எலக்ட்ரிக் காரின் பேட்டரியுடன் இணைத்துக்கொள்ளும் வகையில் மிட்சுபிஷி வடிவமைத்து வருகிறது.

இந்த சாதனத்தை வாங்கி காரின் பேட்டரியுடன் இணைத்துக்கொண்டால், வாஷிங் மெஷின், ரைஸ்குக்கர்,மின்அடுப்பு உள்ளிட்ட அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களையும் இயக்க முடியும்.

மிட்சுபிஷி ஐ-எம்ஐஇவி காரில் பொருத்தப்பட்டிருக்கும் சக்திவாய்ந்த 16 கேவி திறன்கொண்ட பேட்டரி மூலம வாஷிங்மெஷின் உள்ளிட்ட அதிக மின்இழுவை சக்திகொண்ட எலக்ட்ரானிக் சாதனங்களை இயக்க முடியும் என மிட்சுபிஷி கூறியுள்ளது.

பயன்பாட்டை பொருத்து ஒரு நாள் முதல் ஒன்றரை நாள் வரை காரின் பேட்டரியில் சார்ஜ் இருக்கும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஜப்பானை புரட்டி போட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஆகிய இரட்டை இயற்கை சீற்றங்களால் அந்த நாடு நிலைகுலைந்து போனது. வீடு, உடைமைகளை இழந்து தவித்த மக்கள் செய்வதறியாது நிர்கதியாகினர்.

இதுபோன்ற சூழ்நிலைகளின்போது மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை சிறிது குறைக்கும் வகையில் இந்த புதிய சாதனத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மிட்சுபிஷி தெரிவித்துள்ளது.

லிட்டருக்கு 30 கிமீ செல்லும் சின்ன கார்: மிட்சுபிஷி அறிமுகம்

Mirage
லிட்டருக்கு 30 கிமீ செல்லும் புதிய ஹேட்ச்பேக் காரை மிட்சுபிஷி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஆட்டோ கண்காட்சியில் பல புதுமையான தொழில்நுட்பம் கொண்ட கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த கண்காட்சியில், மிட்சுபிஷி நிறுவனம் வைத்திருந்த ஹேட்ச்பேக் கார் அனைவரையும் கவர்ந்தது.

மிராஜ் என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்த கார் 5 பேர் செல்லும் இருக்கை வசதிகொண்டது.

3.7 மீட்டர் நீளம் கொண்ட இந்த கார் என்ட்ரி லெவல் கார் மாடலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த கார் வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட எம்ஐவிஇசி தொழில்நுட்பம் கொண்ட 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த எஞ்சின் ஸ்டாண்டர்டு நிலைகளில் லிட்டருக்கு 30 கிமீ மைலேஜ் கொடுப்பதாக மிட்சுபிஷி தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த கார் விற்பனையை பன்மடங்கு உயர்த்தும் என மிட்சுபிஷி நம்புகிறது.

ஐரோப்பிய சந்தையை தொடர்ந்து இந்தியாவிலும் இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃப்ரீடம் பைக்கை மீண்டும் அறிமுகப்படுத்தும் எல்எம்எல்

LML Freedom
அடுத்த ஆண்டு மீண்டும் தனது ப்ரீடம் பைக்கை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக எல்எம்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கான்பூரை சேர்ந்த லோகியா மெஷின்ஸ் லிமிடேட்(எல்எம்எல்)இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. ஸ்கூட்டர் மற்றும் ப்ரீடம் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களை அந்த நிறுவனம் விற்பனை செய்து வந்தது.

நாடு முழுவதும் டீலர் நெட்வொர்க்கை பெற்று மிதமாக வளர்ந்து வந்த அந்த நிறுவனம் தொழிலாளர் பிரச்னையால் இருசக்கர வாகன உற்பத்தியை நிறுத்தியது.

இந்த நிலையில், இருசக்கர வாகன மார்க்கெட் நல்ல வளர்ச்சி கண்டு வருவதால் மீண்டும் தனது ப்ரீடம் பைக்கை அறிமுகப்படுத்த எல்எம்எல் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து எல்எம்எல் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பிஎஸ்.சவுத்ரி கூறுகையில்,"வாகன உற்பத்தியை நிறுத்தினாலும் எல்எம்எல் பிராண்டுக்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல அறிமுகம் இருக்கிறது.

இன்னமும் வாடிக்கையாளர்கள் எல்எம்எல் பைக்குகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருவதோடு திருப்தியும் தெரிவிக்கின்றனர். எனவே, வாடிக்கையாளர்களின் பேராதரவோடு மீண்டும் ப்ரீடம் பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

பழைய பேஸ் மாடலில் புதிய ப்ரீடம் பைக் உருவாக்கப்பட்டாலும் முற்றிலும் நவீன தொழில்நுட்ப மாற்றங்களோடும், அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட எஞ்சினோடும் ப்ரீடம் மார்க்கெட்டிற்கு வரும்," என்று கூறினார்.
அடுத்த ஆண்டு மீண்டும் தனது ப்ரீடம் பைக்கை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக எல்எம்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கான்பூரை சேர்ந்த லோகியா மெஷின்ஸ் லிமிடேட்(எல்எம்எல்)இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. ஸ்கூட்டர் மற்றும் ப்ரீடம் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களை அந்த நிறுவனம் விற்பனை செய்து வந்தது.

நாடு முழுவதும் டீலர் நெட்வொர்க்கை பெற்று மிதமாக வளர்ந்து வந்த அந்த நிறுவனம் தொழிலாளர் பிரச்னையால் இருசக்கர வாகன உற்பத்தியை நிறுத்தியது.

இந்த நிலையில், இருசக்கர வாகன மார்க்கெட் நல்ல வளர்ச்சி கண்டு வருவதால் மீண்டும் தனது ப்ரீடம் பைக்கை அறிமுகப்படுத்த எல்எம்எல் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து எல்எம்எல் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பிஎஸ்.சவுத்ரி கூறுகையில்,"வாகன உற்பத்தியை நிறுத்தினாலும் எல்எம்எல் பிராண்டுக்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல அறிமுகம் இருக்கிறது.

இன்னமும் வாடிக்கையாளர்கள் எல்எம்எல் பைக்குகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருவதோடு திருப்தியும் தெரிவிக்கின்றனர். எனவே, வாடிக்கையாளர்களின் பேராதரவோடு மீண்டும் ப்ரீடம் பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

பழைய பேஸ் மாடலில் புதிய ப்ரீடம் பைக் உருவாக்கப்பட்டாலும் முற்றிலும் நவீன தொழில்நுட்ப மாற்றங்களோடும், அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட எஞ்சினோடும் ப்ரீடம் மார்க்கெட்டிற்கு வரும்," என்று கூறினார்.

எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்?

Fighting Couples
இவ வாய் இருக்கே, எப்பப் பார்த்தாலும் தொண தொணன்னு யாரையாவது குறை சொல்லிக்கிட்டே இருக்கும் என்று சில பெண்கள் குறித்துச் சொல்வர்கள். அவர்கள் உள்ளுக்குள் பலாப்பழம் போல இருந்தாலும் வெளியில் முள்ளாகத் தெரிபவர்கள்.

குறிப்பாக கணவரிடம் எப்போது பார்த்தாலும் பிலுபிலுவென சண்டை பிடித்தபடி இருப்பார்கள் இந்தப் பெண்கள். வாழ்க்கை முழுவதும் தன்னுடன் வரும் கணவரை குறை சொல்வதில் இதுபோன்ற மனைவிகளுக்கு ஆத்ம சந்தோஷம்.

வாழ்க்கை முழுவதும் நான் உனக்கு, நீ எனக்குத் துணை என்று திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்பேர்பட்ட வாழ்க்கைத் துணையைப் பற்றி குறை சொல்லி பேசுவதில் பல பெண்களுக்கு மகா திருப்தி.

நம்முடைய பாட்டிகள், அம்மாகள் போல இன்றைய பெண்கள் இல்லை. எதையும் நிதானித்து செய்வது, பொறுத்துப் போவது, அட்ஜெஸ்ட் செய்து கொள்வது என பல விஷயங்களிலும் இவர்கள் பலவீனமாகவே இருக்கிறார்கள்.

பல பெண்களுக்கு திருமண வாழ்க்கை சில மாதங்களில் கசந்துவிடுகிறது. மேலும் கணவன் மனைவிக்கு இடையிலான பல சண்டைகள், பூசல்கள், மோதல்களை பக்கத்து வீட்டு பாப்பாத்தியக்காவிடமும், எதிர்வீட்டு எமிலியிடமும், 3வது வீட்டு மும்தாஜிடமும் போய்ச் சொல்லி அழும் பெண்கள் நிறையவே இருக்கின்றனர்.

கணவன் மனைவி இடையே எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் மூன்றாம் மனிதரைத் தலையிட விடுவது விபரீதத்தில் தான் முடியும் என்பதை பெண்கள் உணர வேண்டும். இந்நிலையில் பல பெண்கள் தங்கள் கணவன்மார்களைப் பற்றி அவர் இப்படி, அவர் அப்படி என்று பக்கத்து வீட்டுப் பெண்களிடம் குறை கூறி வருகிறார்கள். அவர்கள் அப்படி செய்வதே தவறு.

அவர்கள் இவ்வாறு அடுத்த பெண்களிடம் குறைபாடினால் அந்த பெண் என்ன தான் அக்கறையாக இருப்பது போல் பேசினாலும் மனதிற்குள் நீ சந்தோஷமா இல்லையா, ஆஹா இது தாண்டி எனக்கு வேண்டும் என்று திருப்திபட்டுக் கொள்வார்கள். ஆனால் வெளியில் அப்படியாம்மா, அழாதேம்மா என்று ஆறுதல் கூறுவது போல நடித்து உங்களுக்கு எதிராக உங்களையே திருப்பி விட முயலலாம்.

இப்படி நீங்கள் அடுத்தவர்களிடம் குறை கூறினால் அவர்கள் இல்லாததும், பொல்லாததும் சொல்லி உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துவிடும் வாய்ப்புண்டு. நம்ம வீடு மட்டும்தான் நாறனுமா, அவ வீடும் நாறட்டுமே என்ற நல்லெண்ணம் படைத்தவர்கள் நம்மிடையே நிறையப் பேர் உள்ளனர் என்பதை உணர வேண்டும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் தான் வேலையின்றி இவ்வாறு செய்கிறார்கள் என்றால். வேலைக்குப் போகும் பெண்கள் அவர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் இல்லை. மதிய உணவு இடைவேளையில், கையில் சாப்பாடும், வாயில் கணவர்களையும் போட்டு பிசைந்து சாப்பிடும் பெண்கள் நிறையப் பேர் உள்ளனர். பிற பெண்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டே கணவரைக் குறைபாடுவது, நாத்தனார்களை வறுத்தெடுப்பது, மாமியாரை மகா கடுமையாக பேசுவது என பற்களுக்குள் போட்டு குதறி எடுத்து விடுவார்கள்.

ஒருவர் இப்படி பேச ஆரம்பித்தால் உடனே மற்றவர்களும் சேர்ந்து கொண்டு, ஆமாமா, எங்க ஊட்டுலயும் இப்படித்தான் என்று ஆரம்பித்து வம்பளக்கும் செயல்களை நிறைய இடங்களில் பார்க்கலாம்.

தாம்பத்ய வாழ்க்கையில் எப்போதுமே, எதையுமே பாசிட்டிவாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் மன நல நிபுணர்கள். தாம்பத்ய வாழ்க்கை என்றில்லை, எதையுமே, எதிலுமே பாசிட்டிவான மனோபாவம் இருந்தால்தான் நாம் வாழ்க்கையில் வெல்ல முடியும் என்பது பொன்மொழியாகும்.

கணவரிடம் குறை இருக்கிறதா, அதை அவரிடமே சொல்லித் திருத்த முயற்சிக்கலாம். முடியாவிட்டால் அவரே உணர்ந்து திருந்தும்படி நாம் நடந்து, சரி செய்யலாம். அகிம்சைக்கு இருக்கிற வலிமை எதற்குமே கிடையாது.

கணவர்தான் என்றில்லை, மனைவி சரியில்லாவிட்டாலும் கூட இதேபோல கடைப்பிடித்து அவர்களைத் திருத்த கணவர் முயற்சிக்கலாம். இப்படி இரு தரப்பிலுமே விட்டுக்கொடுத்து, நீக்குப் போக்காக நடந்து கொண்டால்தான் வாழ்க்கை சிறக்கும், உறவுகள் வலுப்பெறும். மாறாக புறம் பேசுவதினாலோ, குறை கூறிக் கொண்டு மட்டும் இருப்பதினாலோ எதுவுமே சாதிக்க முடியாது.

இப்படி பாசிட்டிவ் அப்ரோச்சுக்கு மாறத் தொடங்கினால் விவாகரத்து உள்பட எந்த 'வியாதியுமே' எந்த தம்பதியையும் அண்ட முடியாது. எனவே, புறம் பேசும் மனைவிமார்களே, கணவர்மார்களே, இனியாவது 'பேச்சை'க் குறைத்து செயலில் காட்ட முயற்சியுங்கள்...!

-oneindia

மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்

Love
ஆண்கள் தங்களின் மனைவியை விட காதலிக்கே அதிக அளவில் செய்வதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அநேக ஆண்கள் தங்களின் கிருஸ்துமஸ் பரிசினை மனைவியைவிட காதலி/காதலிகளுக்கே அனுப்பியுள்ளனர்.

இங்கிலாந்தில் 2,000 ஆண்களிடம் மேற்கொண்ட ஆய்வில், கிருஸ்துமஸ் பரிசுகளை வாங்க சராசரியாக 124 பவுண்ட் வரை ஆண்கள் செலவு செய்தது தெரியவந்தது.

கிருஸ்துமஸ் பரிசு:

89 சதவிகித ஆண்கள் தனது மனைவிக்கு கிருஸ்துமஸ் பரிசு வாங்குவதை விட தங்களின் காதலி/காதலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிருத்துமஸ் பரிசு வாங்கியுள்ளனர். மூன்று சதவீத ஆண்கள் மட்டுமே தனது மனைவிக்கு பரிசுவாங்க செலவு செய்துள்ளனர்.

நாணயத்தின்இரண்டு பக்கம்:

நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல மனைவியை ஒருபக்கமும், காதலிக்கு மற்றொரு பக்கத்தையும் அவர்கள் ஒதுக்கியுள்ளனர். 'ஆத்மார்மான' இந்த உறவுக்கு தவறான அர்த்தங்கள் எதுவும் கற்பிக்க வேண்டாம் என்பதே அந்த ஆண்களின் வேண்டுகோள்.

 

20111228

Windows 8 இலவசமாக சோதனைப் பதிப்பினை பெற்றுக் கொள்ளலாம்

இணையத்தில் சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் தான் இந்த Windows 8 மென்பொருள். மைக்ரோசாப்ட் இந்த மென்பொருளை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த மென்பொருளில் பல வசதிகள் நிறைந்து உள்ளதாம். சமீபத்தில் தான் Windows7 மென்பொருளை வெளியிட்டது. அது கணினி உலகில் மிகுந்த வரவேற்ப்பை பெற்று வருவாயை அள்ளி குவித்தது. அதற்குள் மேலும் பல வசதிகளை புகுத்தி Windows 8 மென்பொருளை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். 64bit,32bit என இரண்டு வகை கணினிகளுக்கும் இந்த மென்பொருள் பொருந்து கிறது. ஆனால் தற்பொழுது இந்த மென்பொருள்  சோதனை பதிப்பு ஆக தான் வெளியிட்டுள்ளது. ஆதலால் இதில் பல்வேறு பிரச்சினைகள் வரலாம்.

இன்ஸ்டால் செய்யும் முறை:
  1.     நீங்கள் டவுன்லோட் செய்ததும் உங்களுக்கு .iso பைல் வந்திருக்கும். அதை நீங்கள் dvd பைலாக Convert செய்து பிறகு இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
  2.     நீங்கள் Windows 7 உபயோகித்து கொண்டிருந்தால் சுலபமாக Windows disk image burner மென்பொருளை உபயோகித்து கன்வேர்ட் செய்து கொள்ளலாம்.
  3.     அல்லது நீங்கள் Vista or Xp உபயோகித்தால் இதற்க்கு பல Burning மென்பொருட்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது டவுன்லோட் செய்து உபயோகிக்கவும்.
  4.     கன்வேர்ட் செய்தவுடன் வரும் பைலை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
கணினி தேவைகள்:
  1.     1 gigahertz (GHz) or faster 32-bit (x86) or 64-bit (x64) processor
  2.     1 gigabyte (GB) RAM (32-bit) or 2 GB RAM (64-bit)
  3.     16 GB available hard disk space (32-bit) or 20 GB (64-bit)
  4.     DirectX 9 graphics device with WDDM 1.0 or higher driver
  5.    Taking advantage of touch input requires a screen that supports multi-touch
இந்த தகுதிகள் இருந்தால் உங்கள் கணினியில் windows 8 மென்பொருளை உபயோகிக்கலாம்.
தரவிறக்க  Official Microsoft Download Links


நன்றி:Nillamuttram

விண்டோஸ் 7ன் மீடியா பிளேயர்!

விண்டோஸ் மீடியா பிளேயர் விண்டோஸ் சிஸ்டத்துடன் நமக்குத் தரப்படும் சாதனமாகும். கணணி உபயோகப்படுத்தும் அனைவரும் பெரும்பாலும் பயன்படுத்தும் மென்பொருள் இதுவாகும்.
ஆனால் இதுவரை எக்ஸ்பி சிஸ்டத்தில் நமக்குக் கிடைத்து வந்த விண்டோஸ் மீடியா பிளேயருக்கும், தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் கிடைக்கும் மீடியா பிளேயருக்கும் பல வேறுபாடுகள் உள்ளன.
இதனால் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கு மாறும் பலர் புதிய அமைப்பினால் தடுமாறுகிறார்கள். அதில் முக்கியமான சில இயக்கங்களை இங்கு காணலாம்.
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்குபவர்கள், முதலில் விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்கவும். Recommended Settings என்ற ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுத்த பின்னர் Finish என்பதில் கிளிக் செய்திடவும். இதில் என்ற ஆப்ஷனும் கிடைக்கும்.
ஆனால் அது இதில் அதிகம் அனுபவப்பட்டவர்களுக்கு மட்டுமே. அடுத்து மியூசிக் பிளேயர் சில சாம்பிள் மியூசிக் கோப்புடன் திறக்கப்படும். சீடி வழி பாடல் கேட்க, சீடியை அதன் ட்ரேயில் வைத்திடவும்.
விண்டோஸ் மியூசிக் பிளேயர் தானாகவே அதில் உள்ள இசை கோப்பை அடையாளம் கண்டு இசைக்கத் தொடங்கும். பின்னர கண்ட்ரோல் பட்டன்களுடன் ஒலியின் அளவு, இயக்கும் விதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
அப்போது இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆல்பம் அல்லது பாடலைக்காண கீழாக வலது பக்கம் உள்ள ஐகானைக் கிளிக் செய்திட வேண்டும்.
பாடலை இயக்குகையில், சீடியை மியூசிக் பிளேயர் லைப்ரேரியில் கொண்டு செல்ல, வலது பக்கம் உள்ள சீடி அடையாளத்தில் கிளிக் செய்தால் போதும்.
இதில் சிறப்பு என்னவென்றால், சீடி இயக்கப்படும் போதே இதனை மேற்கொள்ளலாம். இந்த ரிப்பிங் செயல்பாடு முடிந்தவுடன், ஆல்பம் லைப்ரேரியில் பட்டியலிடப்படும்.
சீடியை உருவாக்க(“Burn”) அங்கு தரப்பட்டுள்ள Burn டேப்பினைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் விருப்பப்படும் பாடல்களை இழுத்துவிட்டால் போதும்.

face book நண்பர்களே மிகவும் கவனம் மீன்டும் வைரஸ்

face book ஜ பயன்படுத்தும் அனைத்து நண்பர்களும் கவனமாக இருங்கள்.மீண்டும் facebook மூலம் sexual video என்ற பெயரில் ஒரு வைரஸ் பரவிக்கொண்டு இருக்கிறது.கீழே கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளவாறு கானப்படும் பதிவுகளை தயவுசெய்து open செய்யவேண்டாம்.
இப்படியான பதிவுகள் உங்கள் நண்பர்களின் கணக்கில் இருந்து வருவது போல இருக்கும்.தயவுசெய்து இதை நம்பி ஏமார்ந்து விடாதீர்கள்…

நன்றி:nillamuttram

கூகுள் தேடுதலில் மேஜிக் வார்த்தைகள் ?

தேடுதலுக்கு அனைவரும் பயன்படுத்தும் கூகுள் தளத்தில் தேடுதலை சுவாரஸ்யமாக மாற்ற சில மேஜிக் வார்த்தைகள் உள்ளன.
இந்த வார்த்தைகளை கொடுத்தால் கூகுள் தளம் சில சுவாரஸ்யமான வடிவங்களில் மாறும். இதனை ஆங்கிலத்தில் Easter Eggs என அழைக்கப்படுகிறது.
Let it Snow: இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோவில் பனி மழை பொழியும். கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக இதனை உருவாக்கியுள்ளது.
Tilt: இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோ ஒரு பக்கம் சாய்வாக காட்சி அளிக்கும்.
Do a Barrel Roll: இந்த வார்த்தையை கொடுத்தால் கூகுள் விண்டோ ஒரு சுற்று சுற்றிவிட்டு பழைய நிலைமைக்கு வரும்.
Hanukkah: இந்த வார்த்தையை கூகுளில் கொடுத்து தேடினால் கூகுள் பாருக்கு கீழே நட்சத்திரத்தினால் ஆன ஒரு வரி காணப்படும்.

கூகுள் +, பேஸ்புக் போட்டியாக மைக்ரோசொப்ட்?: இணையத்தில் தவறுதலாக கசிந்த முன்னோடி மாதிரி

பேஸ்புக் மற்றும் கூகுள் வரிசையில் மைக்ரோசொப்டும் சமூக வலையமைபொன்றினை உருவாக்கி வருவதாக ஆதாரங்கள் கசிந்துள்ளன.
இதற்கான ஆதாரமாக www. socl.com என்ற இணைய முகவரியில் கீழே காட்டப்பட்டுள்ள முதற்பக்கம் வெளியாகியுள்ளது.
இம்முகவரியினை மைக்ரோசொப்ட் அண்மையில் கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இது மைக்ரோசொப்டின் சமூக வலையமைப்பின் முன்வடிவம் எனவும் தவறுதலாக வெளியாகியிருக்கலாம் எனவும் இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இச் சமூக வலையமைப்பின் பெயர் ‘டுலாலிப்’ ஆக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. காரணம் அப்பக்கத்தில் ‘With Tulaip you can find what you need and share what you know easier than ever’ எனக்குறிப்பிடப்பட்டுள்ளமையாகும்.
இதேவேளை இப்பக்கம் அத்தளத்திலிருந்து பின்னர் அகற்றப்பட்டுள்ளதுடன் கீழ் காட்டப்பட்டுள்ள பக்கம் அங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் ஒரு செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது..
மேலும் இது மைக்ரோசொப்டின் சமூகவலையமைப்பு என்பதினை உறுதி செய்யும் பல ஆதாரங்கள் உள்ளதாக      இணையத்தளங்கள்சுட்டிக்காட்டுகின்றன.

அதாவது இதன் பெயர் ‘Tulalip’ என்பது அமெரிக்க வொசிங்டனின் ரெட்மொண்ட் நகரின் பூர்வீகக் பழங்குடியினரைக் குறிக்கும் பெயர் எனவும் இங்கேயே மைக்ரோசொப்ட்டின் தலைமையகமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மைக்ரோசொப்டின் தேடல் பொறியான bing நான்கு எழுத்துக்களை கொண்டதுடன் தற்போது அது socl.com தளமும் 4 எழுத்துக்களை கொண்டதாகும்.
சமூக வலையமைப்புகளுக்கிடையிலான போட்டியில் பேஸ்புக் ஏற்கனவே ஜாம்பவானாக உள்ள நிலையில் கூகுள் தனது கூகுள் + ஐ அண்மையில் அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் மைக்ரோசொப்டின் இரகசிய முயற்சியும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் 10 செயல்கள்!

மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், செரிமானம், இதயத்துடிப்பு, கொட்டாவி, போன்ற செயற்பாடுகளையும்,விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.இதில் மூளையை பாதிக்கும் விஷயங்களும் இருக்கின்றன.
காலை உணவு..
  காலையில் உணவு உண்ணாமல் இருப்பதன் மூலம் ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
அதிகமாகச் சாப்பிடுவது..
  மிக அதிகமாகச் சாப்பிடுவதன் மூலம் இரத்த நாளங்கள் இறுகி மூளையின் சக்தி குறைந்து போகிறது.
புகை பிடித்தல்..
  புகை பிடிப்பதால் மூளை சுருக்கமும் அல்ஸைமர்ஸ் வியாதி வருயதற்கு காரணமாகிறது
சர்க்கரை சாப்பிடுதல்..
  நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
சுவாசித்தல்..
  மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

 தூக்கமின்மை..
   நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
போர்வையால் மூடிக்கொண்டு தூங்குவது..
  தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
நோயுற்ற காலம்..
  உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

மூளைக்கு வேலை..
  மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது,மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
பேசாமல் இருப்பது..
  அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
 
“உங்க மூளையை இனி நல்லா பாதுகாத்துகோங்க”

110 ஆண்டுகளாக எரியும் மின்விளக்கு


அமெரிக்காவில் உள்ள வடக்கு கலிஃபோர்னியாவில் 110 ஆண்டுகளாக ஒரு மின்விளக்கு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு தீயணைப்பு நிலையத்தில் உள்ள தீயணைப்பு வண்டியில் இந்த விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.
இந்த விளக்கை 1901-ம் ஆண்டு அடோல்ஃப் சைலெட் என்பவர் கண்டுபிடித்துள்ளார். அடோல்ஃப் இந்த விளக்கை உருவாக்க இரண்டரை ஆண்டுகள் ஆனதாம். விளக்கை தயாரிக்க உதவும் குறிப்புகளையும் அவர் எரித்துவிட்டாராம். இது போன்ற விளக்கை வேறு யாராலும் உருவாக்க இயலாது என்றும் அவர் குறிப்பெழுதி வைத்துள்ளார்.
பல ஆண்டுகளாக இதே போன்ற மின்விளக்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஒரு குழுவால்கூட வெற்றி பெற இயலவில்லை.

மெல்லக் கொல்லும் புகைப் பழக்கம்

புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் உலக சுகாதார நிறுவனத்தால்,
மே 31ம் தேதி, சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை ஒழிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. “புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும் அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே’ இத்தினத்தின் நோக்கம். புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட, புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது.
ஆறு விநாடிக்கு ஒருவர் : மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கிய காரணியாக புகையிலை கருதப்படுகிறது. புகையிலை என்றதும் நினைவிற்கு வருவது “சிகரெட்’. இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள் தான், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43,புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை. உலகளவில் 6விநாடிக்கு ஒருவர் புகையிலையால் பலியாகிறார். ஆண்டுக்கு 60 லட்சம் பேர், புகையிலை மற்றும் சிகரெட்டால் இறக்கின்றனர். 2030க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும், என கணிக்கப்பட்டுள்ளது. இதில், 70 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் உள்ளனர், என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
ஸ்டைல்‘ : வளர்ந்த மெட்ரோ நகரங்கள் மட்டுமல்லாமல் சிறிய நகரங்களிலும் வயது பாரபட்சம் இல்லாமல் “சிகரெட்’ பிடிக்கின்றனர். பெரும்பாலும் வேலைப்பளு,உடல் பருமனை குறைக்க புகைக்கின்றனர் என்றும், சிலர் “ஸ்டைலுக்காக’ புகைக்கின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
நிறுத்தினால் கிடைக்கும் நன்மைகள் : புகை பழக்கத்தை படிப்படியாக நிறுத்தாமல் ஒரேயடியாக நிறுத்துவதே சிறந்தது. இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. புகைக்காமல் இருந்தால் ரத்த அழுத்தம், இருதயத்துடிப்பு,ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு சீரடையும். புகை பிடிக்காமல் ஒருநாள் இருந் தால், ரத்தத்தில் கலந் திருக்கும் கார்பன் மோனாக்சைடு வெளியேற்றப்படுகிறது. நுரையீரல் சுத்தமாகிறது. இரண்டு நாட்கள் இருந்தால்,உடலில் சேர்ந்துவிட்ட நிக்கோடின் அகற்றப்படும். சுவைக்கும் திறனும், நுகரும் திறனும் அதிகரிக்கும்.மூன்று நாட்களுக்கு பிறகு சுவாசிப்பது எளிதாகிறது. 2 முதல் 21 வாரங்களுக்குள் ரத்த ஓட்டம் சீரடைகிறது. 3 முதல் 9 மாதங்களுக்குள் இருமல், தும்மல் போன்ற குறைபாடுகள் குறைகிறது. நுரையீரலில் செயல்பாடு 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது. புகை பிடிப்பதை நிறுத்தி 4 ஆண்டுகளுக்கு பிறகு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிடும் போது பாதியாக குறைகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிட்டால் பாதியாக குறைகிறது.
புகைபிடிக்கும் பழக்கத்தை விட்ட முதல் வாரம் சிரமமாக இருக்கும். எனினும், இதனால் கிடைக்கும் பலன்,வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
மறுப்போம்மறப்போம் மயானக்குச்சியை : இளம்வயதில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை,அதிகரித்து வருகிறது. ஒருநாளில் 10 சிகரெட் பிடிப்பவர் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுப் பொருளை உட்கொண்டு வெளியிடுகிறார். அவர் தன்னை கெடுப்பதுடன், மனைவி,குழந்தைகளையும் கெடுக்கிறார். பியூட்டேன், காட்மியம்,ஸ்டியரிக் ஆசிப், அம்மோனியா, நாப்தலமைன்,போலோனியம் உட்பட வேதிப்பொருட்கள் சிகரெட் புகையில் உள்ளன. இவை வெடிகுண்டு, பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கப் பயன்படுபவை. எனவே சிகரெட்டும் ஒரு வெடிகுண்டுதான்.
விளைவுகள்:புகைபழக்கம் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. மாரடைப்பு, நுரையீரல் நோய், புற்றுநோய்,சர்க்கரை, பக்கவாதம், தமனிச்சுருக்கம் குறிப்பாக கால்,கை தமனிகள் அடைப்பு, ரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. புகைபிடிப்போருக்கு மாரடைப்பால் இளவயதிலும் திடீர் மரணம் ஏற்படலாம். இது இருதய துடிப்பையும்,ரத்தக்கொதிப்பையும் கூட்டுகிறது. மூக்குப்பொடி,புகையிலை உண்பது, பீடி புகைப்பதும் சிகரெட்டுக்கு சமமானதே. ஆண்களுக்கு மலட்டுத் தன்மையும்,வீரியக்குறைவும் ஏற்பட வாய்ப்புள்ளது. புகை பிடிப்போரின் குழந்தைகளுக்கு சளி, இருமல், மூச்சுத் திணறல் ஏற்படலாம்.
நிறுத்தும் வழிகள்:* மனஉறுதியோடு ஆர்வத்தை அடக்க வேண்டும்.
* புகைபிடிப்பது தவறான செயல் என்பதை மனதில் நினைத்து பதியச் செய்ய வேண்டும்.
* புகைக்கும் ஆர்வம் ஏற்படும்போது சூயிங்கம்,
சாக்லெட், தண்ணீர் அருந்திவிட்டு நினைப்பை மாற்ற வேண்டும்.
* எலக்ட்ரானிக் சிகரெட், நிகோட்டின் கலந்த
கம், பேஸ்ட் பயன்படுத்தலாம்.
நிறுத்தினால் நன்மைகள்:* 20 நிமிடங்களில் ரத்தஅழுத்தம் குறைகிறது.
* எட்டு மணி நேரத்தில் ரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு குறைகிறது.
* 48 மணி நேரத்தில் மாரடைப்பு வரும் தன்மை குறைய துவங்கும்.
* 72 மணி நேரத்திற்கு பிறகு மூச்சுக்குழல் சுத்தமாகிறது.
* 3 முதல் 9 மாதங்களில் இருமல், சளி பிரச்னை குறைகிறது.
* ஒரு ஆண்டுக்குப் பின் மாரடைப்பு வரும் வாய்ப்பு பாதியாக குறைகிறது.
* 10 ஆண்டுகளுக்குப் பின் நுரையீரல்
புற்றுநோய் வரும் வாய்ப்பு அறவே இல்லாமல் போகிறது.
- டாக்டர் ஜெ.சங்குமணி, மதுரை. 98432 72876 .
புகைத்தால் புற்றுநோய் நிச்சயம் : *சிகரெட் போன்ற புகையிலை பொருளில் புற்றுநோயை உற்பத்தி செய்யும் நச்சுப் பொருட்கள் உள்ளன. இவை வாய், தொண்டை,மூச்சுக்குழாய், உணவுக் குழாய், சிறுநீர பாதை வரை எங்கு வேண்டுமானாலும் புற்றுநோயை ஏற்படுத்தும்.
* நுரையீரல் நோய் புற்றுநோய் ஏற்பட காரணம் புகைபிடிப்பதே.
* உலக மக்கள் தொகையில் ஆஸ்துமா 15 சதவீத மக்களையும், சி.ஓ.பி.டி., என்ற இளைப்பு நோய் 5 சதவீத மக்களையும் பாதித்துள்ளது. இதற்கு புகை பிடிப்பதும் காரணம்.
* சிகரெட் புகைப்பதால் நுரையீரல், 30 வயதில் 60வயதுக்குரிய தன்மையுடன் செயல்படும்.
* புகைப் பழக்கத்தை நிறுத்த தற்போது வாயில் மெல்லும் வகையில் சூயிங்கம், தோலில் ஒட்டிக் கொள்ளும் வகையில் நிகோட்டின் ஸ்டிக்கர் போன்றவை வந்துள்ளன.
- டாக்டர் எம்.பழனியப்பன். மதுரை.

துண்டுக் காகிதங்களிலிருந்து மின்சாரம் தயாரித்து சொனி நிறுவனம் சாதனை

ஒரு துண்டுக் காகிதம் ஒன்றில் இருந்து மின்சாரம் உருவாக்கும் தொழில் நுட்பத்தை உலகின் பிரபல மின் உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனமான சொனி கண்டுபிடித்துள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் சொனி நிறுவனம் தனது சுற்றுச் சூழல் தொடர்பான சமூக அக்கறையினையும் வெளியிட்டுள்ளது.
வீணாகப் போகும் துண்டுக் காகிதத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் செயன்முறையினை சொனி நிறுவனம் அண்மையில் மாணவர்களுக்கு விளக்கியது.
துண்டு துண்டாக வெட்டப்பட்ட காகித அட்டையை ஒரு போத்தலினுள் இட்டு அதனுள் தண்ணீரையும் சேர்த்து நன்றாக குலுக்கி சில நிமிடங்கள் வைக்கப்பட்டது.
குறித்த சில நிமிடங்களின் பின்னர் கலவையிலிருந்து உருவாகிய மின்சாரத்தில் இருந்து சிறிய மின்விசிறி சுழல வைக்கப்பட்டது.
மரத் துண்டை அரித்து உண்ணும் கறையான் பெறும் சக்தியும் இதே தொழிநுட்பத்தில் தான் இயற்கையால் செயற்படுத்தப்பட்டதாக சொனி நிறுவனத்தின் பொதுமக்கள் தொடர்பு முகாமையாளரான Chisato Kitsukawa தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் இந்த வகையில் மின்சாரம் தயாரிப்பது குறித்து கல்வி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வருங்காலத்தில் நீர்மின்சக்தி, நிலக்கரி மூலம் மின்சக்தி, அணுமின்நிலையம் போன்ற மின் உருவாகும் மூலங்களுக்கு இப்படியான மாற்றுவழிகள் மூலம் மின்சாரம் கிடைத்தால் இயற்கையும் பாதுகாப்பாக இருக்கும்.

நன்றி:YARLNILAM

மானாவாரியில் காராமணி சாகுபடி!

பயறு வகைகளில் அதிக சத்துகளைக் கொண்டது காராமணி. இதில் 23.4 சதவீதம் புரதம், 1.8 சதவீதம் கொழுப்பு, 60.3 சதவீதம் கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் இரும்புசத்து ஆகியவை உள்ளன. கால்நடைகளுக்கு ஏற்ற பயிராகவும் காராமணி உள்ளது. குதிரை மசாலை விடவும் மிகச் சிறந்தது. இதை தொடர்ந்து சாகுபடி செய்து பசுந்தாள் உரமாகவும் பயன்படுத்தலாம்.


இது மானாவாரிக்கு மிகவும் உகந்த பயிராகும். காராமணி ஆப்பிரிக்காவில் பயிரிடப்படுகிறது. உலக சாகுபடியில் 90 சதவீதம் ஆப்பிரிக்காவில் சாகுபடியாகிறது. மேலும் தென், வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவலாக பயிரிடப்படுகிறது.


இந்தியாவில் உத்தரபிரதேசம், பஞ்சாப், தில்லி, ஹரியாணா, தென்இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பயரிடப்படுகிறது. இதை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். இருந்தாலும் மார்ச்-ஏப்ரல், ஜூலை-ஆகஸ்ட் மாதங்கள் சாகுபடிக்கு மிகவும் சிறந்த பருவமாகும்.


தமிழ்நாட்டில் ஆடிப் பட்டத்தில் வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் பயிரிட கோ-6, பையூர்-1, பூசா-152, கோ(சி.பி.)-7 ரகங்கள் சிறந்தவை. கோ-6 பயிரை 55 நாட்களில் அறுவடை செய்யலாம். அனைத்து பருவங்களிலும் ஏக்கருக்கு 670 கிலோ மகசூல் பெறலாம். பையூர்-1 பயிரை 75 நாட்களில் ஜூன்-ஜூலை, பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பயிரிட்டு 900 கிலோ மகசூல் பெறலாம். பூசா-152 ரகத்தை 75 நாட்களில் அனைத்து பருவங்களிலும் பயிரிட்டு 1200 கிலோ வரை மகசூல் பெறலாம்.



பையூர்-1, கே.எம்.1, கோ-2, கோ-3 சாகுபடிக்கு ஹெக்டேருக்கு விதைஅளவு தனிப்பயிராக இருந்தால் 20 கிலோவும், கலப்புப்பயிராக இருந்தால் 10 கிலோவும் இருக்க வேண்டும். பயிர் எண்ணிக்கை ஹெக்டேருக்கு 3.50 லட்சம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ரகங்களுக்கு ஏற்றவாறு இடைவெளி 30-10 செ.மீ., 45-15 செ.மீ. இருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


காரமணியை பயிரிட நிலத்தை நன்கு உழுது மண்ணை பதப்படுத்த வேண்டும். நன்கு வடிகால் வசதியும் அமைக்க வேண்டும். ஆழமாக உழுவது மிகவும் நல்லது. காராமணி பயிருக்கு பரவலாக மழை பெய்யும் காலங்களில் நீர் பாய்ச்சத் தேவையில்லை. இப்பயிருக்கு முதல் கைக்களை 10-15 நாட்களிலும், இரண்டாவது கைக்களை 25-30 நாட்களிலும் எடுக்க வேண்டும்.



இறவையாக சாகுபடி செய்யும்போது ஹெக்டேருக்கு பாசலின் 1.5 லிட்டர் என்ற களைக்கொல்லி மருந்தை 900 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 3-வது நாளில் தெளிக்க வேண்டும். காய்கள் 80 சதவீதம் விதை முற்றியவுடன் அறுவடை செய்து சில நாட்கள் சூரிய ஒளியில் காயவைத்து விதையை பிரித்து எடுக்க வேண்டும்.



காராமணி பயிரிடுவது குறித்து மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் அவர்களது பகுதியில் உள்ள வேளாண் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்று காவேரிப்பாக்கம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் வி.ஜெயச்சந்திரன், வேளாண் அலுவலர் டி.பாபு, உதவி அலுவலர் ஜி.திருக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


நன்றி: தினமணி

20111227

எங்கே செல்வான் உழவன்?


இந்தியாவில் சராசரியாக நாளொன்றுக்கு 40-50 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். விவசாயத்தை விட்டுவிட்டு நகர்ப்புறத்துக்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், உணவு உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விவசாயத்தைச் சார்ந்திருக்கும் நாடுகள், விவசாய வளர்ச்சிக்குத் திட்டமிட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்கி நாட்டை வளமிக்கதாகச் செய்ய வேண்டும்.
முந்தைய திமுக அரசில் இலவச கலர் டிவிக்காக செலவிடப்பட்ட 600 கோடி ரூபாயில் மூன்று லட்சம் கறவை மாடுகளை வாங்கிக் கொடுத்திருக்கலாம் என்கிறது ஒரு செய்தி.
                                   
உணவுப் பஞ்சம் என்கிற பூதம் கொல்லைப்புறத்தில் உட்கார்ந்து மிரட்டி வருகிறது. என்றைக்கு வீட்டுக்குள் வரும் என்று தெரியவில்லை.
இச் சூழலில் மற்ற துறைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட வேளாண் துறைக்கு வழங்க நமது மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.
அரசு ஊழியர்களுக்கும் தனியார் ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு, பஞ்சப்படி, ஊக்க போனஸ் உண்டு. ஆனால், உழவன் உற்பத்தி செய்யும் உணவுப் பொருள்களுக்குக் கட்டுப்படியாகும் கொள்முதல் விலைகூட இல்லை. காலங்கள் பல கடந்தாலும், நிலைமை இன்னும் மாறவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.
ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 1930-35-ம் ஆண்டுகளில் ரூ.15 ஆக இருந்தது.
இன்று தங்கத்தின் விலை ரூ.21,000-ஐ கடந்துள்ளது. இந்த விகிதத்தில் பார்த்தால் 1935-ல் குவிண்டாலுக்கு ரூ.5 ஆக இருந்த நெல், இன்று என்ன விலையாக இருக்க வேண்டும்.
நெல்லும் தங்கமும் மூன்றுக்கு ஒன்று எனும் விகிதத்தில், இன்று நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.7,000 ஆக விற்க வேண்டுமே.... நினைக்கவே நெஞ்சு அடைக்கிறது...!

மக்கள்தொகைப் பெருக்கத்தால், தங்கத்துக்கு மட்டுமல்ல நெல்லுக்கும்தான் தேவை அதிகரித்துள்ளது. தினமும் 24 மணி நேரமும் பிரதான தொலைக்காட்சி அலைவரிசைகளில் தங்கத்தின் விலை வரி வரியாக ஓடுகிறது. ஆனால், நெல், கோதுமை விலை குறித்து ஓடுவதில்லையே. எல்லாமே வியாபாரமயம்தானே..!
தங்கம், வெள்ளிக்குக் கொடுக்கும் மரியாதையை வேளாண் பொருளுக்குக் கொடுக்க மறுக்கிறோமே, ஏன்?
விவசாயிகளை இந்தியத் தாய் மண்ணின் முதுகெலும்பு என்கிறார்கள். ஆனால், முதுகெலும்பு முறிந்த நிலையில் விவசாயிகள் உள்ளனர் என்பதே நிதர்சன உண்மை. இதை எந்த அரசியல்வாதியோ அல்லது அரசோ கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
அரசியல்வாதிகளின் விவசாய ஆதரவுப் பேச்சு எல்லாம் ஏமாற்று வேலைதான் என்று விவசாயி கூறுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
விவசாயியின் வாழ்வாதாரத்தைப் பறித்து பன்னாட்டு நிறுவனங்கள் பாட்டிலில் அடைத்து விற்கும் ஒரு லிட்டர் தண்ணீரை (சுத்தமான) ரூ.15-க்கு மேல் விலை கொடுத்து வாங்கும் மக்கள், அரை லிட்டர் பாலை ரூ.15-க்கு வாங்க மறுப்பது ஏனோ?
"ஜெய் ஜவான்... ஜெய் கிஸôன்...' என்று அரசு கோஷம் போட்டதும் இந்த நாட்டில்தான். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் மட்டும் விவசாயிகள் 2 லட்சத்தும் அதிகமானோர் தற்கொலை செய்துகொண்டுள்ளதும் இந்த நாட்டில்தான்.
இவர்களில் யாரும் பெற்றோரை இழந்த துக்கத்தினாலோ, காதல் தோல்வியாலோ, குடும்ப நெருக்கடியாலோ, வயிற்று வலியாலோ உயிரைத் துறக்கவில்லை.
கடன் தொல்லையால், வட்டி கொடுக்க முடியாமல், பயிர்கள் ஏற்படுத்திய நஷ்டத்தால் தற்கொலை செய்துகொண்டவர்கள்தான் இவர்கள். போர்களின்போது இறப்பவர்களைவிட இந்த எண்ணிக்கை அதிகம் என்பது தாய்நாட்டுக்குப் பெருமை இல்லை என்பதை அரசு உணரவில்லையே!
நிறைய நிலம் வைத்திருந்து நிறையக் கடன் வாங்கி, நஷ்டம் அடைந்து அதிகக் கடன் நிலுவை வைத்திருப்பவர்கள் பெரு விவசாயிகள். குறைவாக நிலம் வைத்திருந்து குறைவாகக் கடன் வாங்கி குறைந்த நஷ்டம் அடைந்து குறைவாகக் கடன் நிலுவை வைத்திருப்பவர்கள் சிறு விவசாயிகள்.
பெரு விவசாயிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அவர்களைத் தேடி வந்து அளிக்கப்படும். சிறு விவசாயிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் வங்கிகளில் பட்டியலாகவே ஒட்டப்படும்.
எங்கே செல்வான் உழவன்?

பிரபலமான இடுகைகள்

இந்த தலைப்புகளில்...